Main Menu

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பொதுச் சுடரினை மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த போராளிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இன்று காலை யாழ்ப்பாணத்திலும் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...