Main Menu

தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை

தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் உயிரிழப்பு எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,112 ஆக அதிகரித்துள்ள அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு புதிதாக அடையம் காணப்பட்டவர்களில் 05 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 02 பேர் குவைத்தில் இருந்தும் ஒருவர் இந்தியாவில் இருந்தும் திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 13 நாட்களில் தாய்லாந்தில் எந்த உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பகிரவும்...