Main Menu

தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி

சாரதி ஒருவர் தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி தள்ளியுள்ளார்.  Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை Audi R8 வகை மகிழுந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். வீதி அருகே உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துளை இடித்து சேதமாக்கினார்.  இச்சம்பவத்தை அடுத்து வீதி முழுவதும் கண்ணாடி துகள்ககும், வாகனத்தின் உடைந்த துண்டுகளும் பரவி கிடந்துள்ளது.  தவிர, இச்செயலிலில் ஈடுபட்ட  நபரின் மகிழுந்தும் பலத்த சேதம் அடைந்தது. இதுவரை இச்சம்பவம் தொடர்பாக ஐந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பகிரவும்...