Main Menu

தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது.

வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோயிலில் இன்று காலை விசேட வழிபாடுகளை மேற்கொண்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அதன் பின்னர் அவர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ். மற்றும் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிறிதரன் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இணைந்து தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...