Main Menu

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர், அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்தே நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...