Main Menu

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி ஒன்று அமைக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அதன்போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சினைகளை கையாள்வதற்கு சட்டத்தரணிகள் அணியை உருவாக்குவதற்கும் அதில் இணைந்து பயணிப்பதற்கும் அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோவும் கலந்து கொண்டார்.

பகிரவும்...