தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,270 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 613 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 98 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 43 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 39 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 682 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 95 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,680 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,270 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 1,01,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.