Main Menu

தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கொரோனாதொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தோர் மற்றும் குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 இலட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 4,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...