தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பியாக கே.கே.திரிபாதி நியமனம்
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பியாக பதவியிலுள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் புதிய டி.ஜி.பியாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது.
இவர் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், 2 முறை சென்னை பொலிஸ் ஆணையராகவும், பொருளாதார குற்றப்பிரிவில் ஐ.ஜி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் என்பதுடன் சிறைத்துறை தலைவராக இருந்த காலப்பகுதியில் கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தர திட்டங்களை செயற்படுத்தியவர்.
இதேபோன்று தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்தவர் என்பதுடன் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.