Main Menu

தன்னை தானே தனிமைப்படுத்தினார் ஜேர்மனிய சான்சிலர்!

ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்கல் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஞ்சலா மேர்கலிற்கு நோய் தடுப்பு மருந்தினை வழங்கிய மருத்துவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சான்சிலர் வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் அறிவித்த சில நிமிடங்களின் பின்னர் அவரிற்கு மருந்து வழங்கிய மருத்துவரின் நிலை குறித்து  சான்சிலரிடம் தெரிவித்ததாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஜேர்மனிய சான்சிலரிற்கு முன்னெச்சரிக்கை மருந்து வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...