Main Menu

தனிஸ் அலிக்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளரான தனிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜீலை மாதம் 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தனிஸ் அலி கைது செய்யப்பட்டிருந்தார்.

விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு ஒன்றுக்கு செல்ல முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...