Main Menu

சுயாதீனமான நீதித்துறை செயல்முறைக்கு அரச சேவையின் அர்ப்பணிப்பு அவசியம்- ஜனாதிபதி செயலாளர்

அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் தரப்பினராகும், நீதித்துறை விவகாரங்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் அல்லது அதற்கு கீழ்மட்ட அதிகாரிகளினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசர் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறை அதிகாரிகள் நேரடி கடிதப் பரிமாற்றங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக, தாபன விதிக்கோவையின் XXVII அத்தியாயத்தின் ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பான பொது நிர்வாக சுற்றறிக்கையின் விதிமுறைகளின்படி சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மாத்திரம் கடிதப் பரிமாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அல்லாத வேறு விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கடிதத்தொடர்பு மேற்கொள்ளப்படுவதாயின், அந்த கடிதப் பரிமாற்றங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

நீதித்துறை அமைச்சு அல்லது பிற அரச நிறுவனங்களினால் தமது விடயதானத்துடன் கூடிய அன்றாட சாதாரண நிர்வாக விடயங்கள் தொடர்பாக, நீதிச் சேவை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும் இந்தச் சுற்றறிக்கையின் விதிகள், பொருந்தாது எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...