Main Menu

ஞாயிறு முதல் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பரிஸ் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது.  அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாணிலத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மூடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பரிசில் உள்ள டிஸ்னிலேண்டும் மூடப்படுவதாக நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த கேளிக்கை பூங்கா மூடப்படுகின்றது.  “இது ஒரு முன்னெச்சரிக்கை நிகழ்வு” அதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்காவில் வெளிப்புற நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...