Main Menu

ஜோர்ஜியாவில் துப்பாக்கி பிரயோகம் – 8 பேர் உயிரிழப்பு!

ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் நேற்று(செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அட்லாண்டாவின் வடக்கே செரோகி கவுண்டியில் உள்ள யங்ஸ் ஆசிய மசாஜ் நிலையத்தில் மாலை 5 மணியளவில் ஒரு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அட்லாண்டாவில் அமைந்துள்ள மேலும் இரு மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில்  21 வயதுடைய ரொபர்ட் ஆரோன் லாங் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்...