Day: March 17, 2021
பிரேமலதாவை வெற்றி பெற வைப்போம்- டி.டி.வி.தினகரன்
தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தமேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நாடு திரும்பினால் தனிமைப்படுத்தல் இல்லை – சுகாதார அமைச்சு
வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்குவதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். வீட்டில்மேலும் படிக்க...
ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகள்!
ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறன. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிகமேலும் படிக்க...
ஜோர்ஜியாவில் துப்பாக்கி பிரயோகம் – 8 பேர் உயிரிழப்பு!
ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் நேற்று(செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டாவின் வடக்கேமேலும் படிக்க...
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனை தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்டமேலும் படிக்க...
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் – இஸ்ரேல் ஆய்வாளர்கள்!
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்புத் தரும் என இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வை, ஜெருசலத்திலுள்ள Hadassah பல்கலைக்கழக மருத்துவ நிலையம் நடத்தியது. பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பிரசவத்திற்கு மூன்று மாதமே உள்ள 20 பெண்கள்மேலும் படிக்க...
சாதிப்பவனைப் பார்த்து வாக்களியுங்கள் – கமல்ஹாசன்
சாதி பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவனை பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கமலஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியமேலும் படிக்க...
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது- கெஹெலிய
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை மாத்திரம் இதற்கான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
மத ஒற்றுமை குறித்து முன் வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் – மீனாக்ஷி கங்குலி
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள மனிதமேலும் படிக்க...