Main Menu

ஜேர்மனியில் கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 868பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 37இலட்சத்து 26ஆயிரத்து 700பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...