Main Menu

வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர் – ஐ.நா.

வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின் வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஎஸ்ஐஎஸ்- கே மற்றும் தாலிபான்களுடன் கூட்டுறவை அல் கொய்தா ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அல் கொய்தா அமைப்பின் பல மூத்த தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் அதனை தாலிபான்களுடன் ஒன்றிணைக்க ஹக்கானி நெட்வொர்க் முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...