Main Menu

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்க ஒப்புதல்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா  நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட இல்லத்தில்    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.

அவரது மறைவுக்கு பின்  அதனை நினைவு இல்லமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...