Main Menu

ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

இதேவேளை நில நடுக்கத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில்  கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியானது பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...