ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம்
நேற்று இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான மரீன் லு பென் மற்றும் இம்மானுவல் மக்ரோன் ஆகிய இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டனர். அதையத்து அவர்களது வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Elabe poll நிறுவனம் L’Express மற்றும் SFR ஆகிய ஊடகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், இம்மானுவல் மக்ரோன் 59% வீத வாக்குகளையும், மரீன் லு பென் 39% வீத வாக்குகளையும் பெறுவார்கள் என தெரியவந்துள்ளது.
மரீன் லு பென் மிகப்பெரும் பின்னடைவை இந்த விவாதத்தின் பின்னர் சந்தித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை, விவாதத்துக்கு முன்னர் மக்ரோன் 54.5% வீத வாக்கினையும், மரீன் லு பென் 45.5% வீத வாக்கினையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.