Main Menu

ஜனாதிபதி ஆணைக் குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீண்டும் அறிவிப்பு

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளையதினம் (12.09.2019 ) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் நாளையதினம் ஆஜராக முடியாமை குறித்து பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி (16.09.2019) திங்கட்கிழமை ஆஜராகுமாறு பிரதமருக்கு மீண்டும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...