Main Menu

சோம்ப்ஸ்-எலிசேயில் நத்தார் மின் விளக்குகளுக்கு தடை?

ஆண்டுதோறும் கிரிஸ்மஸ் மாதத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் இம்முறை மின்விளக்கு அலங்காரங்கள் இடம்பெறாது என அறிய முடிகிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாவில்லை என்றபோதும், வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானத்தை பரிஸ் நகரசபை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை பரிஸ் நகரசபை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மின் விளக்கு அலங்காரம் இடம்பெறாது என அறிய முடிகிறது.

மின்சாரத்தினை சேமிக்கும் விதமாக ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகளை நேரகாலத்துடன் அணைக்கவும், வீதி விளக்குகளை மட்டுப்படுத்தவும், விளம்பர பதாகைகள் ஒளிர்வதை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

பகிரவும்...