Main Menu

சாரதி பத்திரம் இன்றி மகிழுந்து செலுத்திய காவல்துறை அதிகாரி கைது

சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாமல் எட்டு ஆண்டுகளாக மகிழுந்து செலுத்திவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அதே நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கடமையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி மகிழுந்தில் பயணித்த அவரை, காவல்துறையினர் சிலர் சோதனையிட்டனர். அதன்போதே அவரிடன் சாரதி அனுமதி பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த அதிகாரி கடந்த 2014 ஆம் ஆண்டில் தனது சாரதி அனுமதி பத்திரத்தினை இழந்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர் அதை மீள பெறவில்லை எனவும், கடந்த எட்டு ஆண்டுகளாக சாரதி அனுமதி பத்திரம் இல்லாமலே மகிழுந்து செலுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி விரைவில் Versailles நகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளார்.  

பகிரவும்...