Main Menu

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் மையங்களின் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளின் ஓட்டுகள், பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படும்.

திருத்தணி, திருவள்ளூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரி;

பூந்தமல்லி, ஆவடி – பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி;

மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் – பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி;

சென்னை

ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, – சென்னை மைலாப்பூர் ராணிமேரி கல்லூரி;

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தருபவர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே போலீசார் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், – நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி;

விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, – கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்.

செங்கல்பட்டு மாவட்டம்

சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், – எம்.சி.சி. கல்லூரி;

செங்கல்பட்டு, திருப்போரூர் – தண்டரை ஆசான் பொறியியல் கல்லூரி;

செய்யூர், மதுராந்தகம் – நெல்வாய் ஏ.சி.டி. பொறியியல் கல்லூரி;

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் – காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...