Main Menu

சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.ஆனாலும், கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1458 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சென்னையில் 200 இற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...