சென்னைக்கு வருகைதரும் சசிகலாவுக்கு 12 இடங்களில் வரவேற்பு!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 8ஆம் திகதி சென்னைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்னை வரும் சசிகலாவை வரவேற்பதற்கு அ.ம.மு.க மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி சென்னை பொலிஸ் ஆணையாளரிடம், அ.ம.மு.க.சார்பில் அனுமதி கேட்டு அ.ம.மு.க.நிர்வாகி செந்தமிழன் நேற்று முன்தினம் மனுவொன்றை கையளித்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக பொலிஸ் ஆணையாளர் பரிசீலனையில் உள்ளதாகவும் அதுகுறித்து உரிய முடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சசிகலா, அ.தி.மு.க கொடியை பயன்படுத்துகிறார் என அமைச்சர்கள் புகார் அளித்துள்ள நிலையில், சென்னையில் வரவேற்பு பேரணிக்கு, பொலிஸார் அனுமதி அளிக்க மாட்டார்கள் எனபொலிஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.