Main Menu

சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“ஒளிரும் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது.  இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும். தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்தவூர்  திரும்பியுள்ள நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...