Main Menu

சுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்!

தெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று (புதன்கிழமை) 15:00 மணிக்கு வெட்லாண்டாவின் மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் இந்த வழக்கை கொலை முயற்சி என்று கருதுகின்றனர். ஆனால் பயங்கரவாத நோக்கங்களுக்கான சாத்தியக்கூறுகளையும் விசாரிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது 20 வயது மதிக்கதக்கவர் அருகிலுள்ளவர்களையும் பொலிஸாரையும் தாக்க முயன்றதால் அவரை பொலிஸார் சுட்டுப் பிடித்தனர்.

எனினும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தாக்குதல் தாரி, தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் உயிராபத்தற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பகிரவும்...