Main Menu

சுயாதீன மனித உரிமை குறித்த ஆணைக்குழுவின் செயலாளராக சிவஞானசோதி நியமிப்பு!

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராகக் கடமையாற்றியவரும் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றி வருபவருமான வே.சிவஞானசோதியே இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக மூன்று உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...