Main Menu

சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்!

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி வீதியில் விழுந்தார்.

இதன்போது பின்னால் வந்த லொரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு இன்று(புதன்கிழமை) நேரில் சென்ற ஸ்டாலின் சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...