Main Menu

சுதந்திர தின அமுத பெருவிழா- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

பகிரவும்...