Main Menu

சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. 

நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏனைய கட்சிகளில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, பொதுத்தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. 

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்ட பௌசி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஏ.எச்.எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா , டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரை சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த போதிலும், பௌசி முன்னிலையாகாததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

பகிரவும்...