Main Menu

சுகாதார நிலவரம் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா – சஜித்

சுகாதார நிலவரம் தொடர்பாக, முழுமையான அறிக்கையொன்றை சுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையின் சுகாதார நிலவரம் தொடர்பாக, முழுமையான அறிக்கையொன்றை சுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா என கேட்கிறோம்.

அப்படியானால், நாம் நாளைக்கே பொதுத் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடத் தயாராகவே இருக்கிறோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...