Main Menu

சீனாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்துக்கு உள்ளான படகில் பெரும்பாலானோர் மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பகிரவும்...