Main Menu

சீனாவிடம் இருந்து துரித சோதனைக் கருவிகளை வாங்கியது தமிழக அரசு!

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

தமிழகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரேநேரத்தில் ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெறமுடியும் எனவும் கூறப்படுகின்றது. கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

துரித பரிசோதனைக் கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ். மப்பிங் மூலமாக எந்தெந்தத் பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...