Main Menu

சிவனொளி பாதமலை யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் கைது!

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (21) சிவனொளிபாதமலையை தர்சிக்க வந்த 14 இளைஞர்கள் போதைபொருளுடன் நேற்றய தினம் ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனை சாவடியில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஊடாக ´லுசி´ என்ற பொலிஸ் மோப்ப நாயினை பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்ட போதே இந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதோடு, இந்த சந்தேக நபர்களிடம் இருந்து ஜஸ், ஹோரோயின், மதனமோதகம், கேரளா கஞ்சா போன்ற போதை பொருட்கள் மீட்கபட்டதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு, .அவிசாவளை, காலி, எல்பிட்டிய. கம்பஹா, ஆகியபகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதினை கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட 14சந்தேக நபர்களையும் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையின் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் அட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பகிரவும்...