சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.
அந்த நாட்டின் கடற்கரையோர நகரமான வால்பரைசோ என்ற இடத்தில் புதர்களில் ஏற்பட்ட தீ வீடுகளிலும் பற்றியது. கடல் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது.
தீயின் தாக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்தத் தீ விபத்தில் சில வளர்ப்புப் பிராணிகள் உயிரிழந்திருந்தாலும், மனிதர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என வால்பரைசோ நகர தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.