Main Menu

சிறிலங்காவில் ஆசிய கரையோர காவல்படை தலைவர்களின் கூட்டம்

ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.

சிறிலங்காவில் முதல்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கரையோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆசியாவில் உள்ள 22 உறுப்பு நாடுகள், பிராந்தியங்களின் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், உயர்மட்ட கொள்கைசார் விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

பகிரவும்...