Main Menu

சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொய் பிரச்சாரம் பரவுவதாகவும், எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பகிரவும்...