Main Menu

சஹ்ரானின் சகாக்கள் மூன்று பேர் சி.ரி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்பு

21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும்  மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். 

நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார்.

பகிரவும்...