சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கு மோடி உரை
சர்வதேச யோகா தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதும் ஜூன் 21ஆம் திகதியான நாளை யோகா தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகா தினப் பயிற்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.
இதனால், தலைநகர் டெல்லியில் இருந்தபடி அவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதோடு யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.