Main Menu

சர்வதேச போதை மருந்து கடத்தலை முறியடித்த டெல்லி போலீசார்

2500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து மிகப்பெரிய சர்வதேச போதை மருந்து கடத்தலை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், முறியடித்துள்ளனர்.

போதை மருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு, மும்பை வழியாக டெல்லிக்கு கண்டெய்னர்களில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரிக்கு அருகே உள்ள ஒரு ஆலையில் அதை பதப்படுத்தி, பஞ்சாபில் விநியாகிக்கும் திட்டத்துடன் ஹெராயின் கடத்தப்பட்டதாகவும் 2 பேரை கைது செய்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

பகிரவும்...