Main Menu

பல ஆண்டுகளாக வேப்ப மரத்தின் கீழ் புதைந்திருந்த சிவலிங்கம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வேப்ப மரம் ஒன்றின் கீழ் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்து பொதுமக்கள் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

பெரிய மடியூர் என்ற அந்த கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சிவலிங்கம் ஒன்று தலைப்பகுதி மட்டும் லேசாக தெரியும் வகையில் மண்ணில் புதைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக அதனை வெளியே எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாத நிலையில், அந்த இடத்தில் வேப்ப மரம் ஒன்று பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டது.

இந்த நிலையில், ஊர் மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்தின் வேர்ப்பகுதியைத் தோண்டி சிவலிங்கத்தை வெளியே எடுத்து, அருகில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

பகிரவும்...