சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.