Main Menu

சம்பந்தன் மற்றும் திகாம்பரத்திற்கு மூன்று மாதம் விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சுகயீனமுற்றிருப்பதால்  விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி மே 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு இருவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...