Main Menu

சிறுபான்மையினர் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்த வெற்றிக்கு அர்த்தமில்லை – சஜித்

சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து பெற்றுக்கொண்ட வெற்றி முழுமையடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இராணுவத்தினரின் உயிர்த்தியாகத்திற்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சமாதானத்திற்கு நாம் என்றும் தலை வணங்குகிறோம்.

எனினும், நாட்டில் இன்றும் ஒரு தரப்பினர் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிப்பார்களாயினும் எமது நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிய செய்ய முடியாது போய்விடும்.

எனவே, அந்தத் தரப்பினரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

விசேடமாக ஒருமித்த நாட்டுக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தை இதேபோன்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினருக்கும் ஏனைய மதத்தினருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண வேண்டும்.

இதன் ஊடாகவே நாம் பெற்றுக்கொண்ட சமாதானத்திற்கு முழுமையாக அர்த்தம் கிடைக்கும். நாம் பெற்றுக்கொண்ட வெற்றியும் நிலைத்து நிற்கும்” என அவர் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...