Main Menu

சமாதானத்தை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது

நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்தி படைவீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் வவுனியாவைச் சென்றடைந்தது.

நடைபயணம் ஆரம்பித்து நான்காம் நாளான இன்று (புதன்கிழமை) வவுனியாவை சென்றடைந்த இப்பயணம் இன்று மாலை மதவாச்சியை சென்றடையவுள்ளது.

யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடை பயணம் கதிர்காமத்தில் நிறைவடையவுள்ளது.

படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடைபயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...