Main Menu

சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது!

சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோகோ, ஈரான், ஈராக், பாலஸ்தீன், எகிப்து மற்றும் சிரிய நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
அவர்களுள் அதிகமானவர்கள் சிரிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட அனைவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிரவும்...