Main Menu

சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்- சம்பிக்க

அரசாங்கத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, தலைமைத்துவம் ஒன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,  “அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமையை இட்டு நாம் உண்மையில் மகிழ்ச்சியடைகிறோம்.

தற்போது, நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரது ஆதரவுடனும் அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார். இந்த அரசாங்கத்தில் சில குறைகள் இருக்கின்றன.

ஆனால், ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் மக்களுக்காக முழுமையாக பெற்றுக்கொடுத்த இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எனது விரும்பமாக இருக்கிறது.

எதிர்க்காலத்தில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து, புதிய யுகத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு இதுவரை எந்தவொரு நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை.

எம்மைப் பொறுத்தவரை நிபந்தனைகளை விட, கொள்கைகளே முக்கியமாக கருதப்படுகிறது.

இதற்கு ஏற்ற ஒரு குழுதான் தேவைப்படுகிறது. ஆகையால் முழுமையான ஒத்துழைப்புக்களை நாம் விரைவில் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...