Main Menu

ராஜஸ்தானில் கோர விபத்து – 13 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகள் வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டையிழந்து எதிரே வந்துகொண்டிருந்த ஜீப் ரக வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த கோர விபத்தில் இரு வாகனங்களில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 12 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...